தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தி.மலையில் எல்லை தெய்வ வழிபாடு நிறைவு: வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் பவனி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் நடந்த எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் பவனி வந்து அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி எவ்வித இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி கடந்த 3 நாட்களாக எல்லை தெய்வ வழிபாடு நடந்தது. அதன்படி, முதல் நாள் துர்க்கையம்மன் உற்சவமும், இரண்டாம் நாளான நேற்று முன்தினம் பிடாரியம்மன் உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, நேற்று இரவு விநாயகர் உற்சவம் நடந்தது.

Advertisement

அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் உடன் வலம் வந்தார். சுவாமி திருவீதி உலாவின்போது, விட்டு விட்டு லேசான மழை பெய்தது. ஆனாலும், மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement

Related News