தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி களைகட்ட தொடங்கிய மாடு, குதிரை சந்தை..!!

திருவண்ணாமலை: தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் குதிரை மற்றும் மாடு சந்தை களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மற்றமாநிலங்களில் இருந்தும் சந்தையில் வியாபாரிகள் குவிந்துள்ளனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழா போது மாடு மற்றும் குதிரை சந்தை நடத்தப்படுவது வழக்கம். கார்த்திகை திருவிழாவில் மாடு, குதிரைகள் வாங்கி சென்றால் வியாபாரம் பெருகும் என்பது நீண்ட காலமாக அப்பகுதியில் இருந்து வரும் நம்பிக்கை ஆகும். அதன்படி செங்கம் சாலையில் உள்ள சந்தை மைதானத்தில் நேற்று தொடங்கிய சந்தையில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான குதிரைகள் மற்றும் மாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Advertisement

காங்கேயம், ஜெர்சி, ஒங்கோல், கிர் என பல்வேறு வகையான மாடுகள் ரூ.5,000 முதல் ரூ.1.30 லட்சம் வரை விற்பனையாகின்றன. இதுபோல் காட்டு வாடா, மார்வாரி உள்ளிட்ட குதிரைகள் சுமார் ரூ.10,000 முதல் ரூ. 2 லட்சம் வரை விற்பனையாகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு குதிரைகள் விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ள. இந்த ஆண்டு முதல் முறையாக சந்தையில் ஒட்டகம் கொண்டுவரப்பட்டுள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதில் சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று தொடங்கிய திருவண்ணாமலை கால்நடை சந்தை நாளை வரை உள்ளது.

Advertisement

Related News