தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு: ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த கோரிக்கை

திருவண்ணாமலை: திருப்பதியை போன்று திருவண்ணாமலை கோயிலில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறநிலையத்துறை பரிந்துரைக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவண்ணாமலை கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகையி தருகின்றனர்.

இதனால் சாமி தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கக்கூடிய நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக கோவில் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மன் கோபுரம் அருகே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வெளியூர் பக்தர்கலின் வருகை அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய உள்ளூர் வாசிகள் சாமியை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தரும் வெளியூர் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கூட்ட நெரிசலை குறைக்க திருப்பதியை போன்று திருவண்ணாமலை கோயிலில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறநிலையத்துறை பரிந்துரைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related News