தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலையில் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் ஓட்டம்

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

Advertisement

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். அதில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாரத்தான் ஓட்டப்போட்டி நேற்று நடந்தது.

இப்போட்டியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு கிரிவலப்பாதையில் உள்ள சீனுவாச பள்ளி கோசாலை முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை மாரத்தான் ஓட்டம் நடந்தது.

அதேபோல், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு கிரிவலப்பாதையில் அபய மண்டபம் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 25 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் (அவலூர்பேட்டை சாலை சந்திப்பு) முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடந்தது.இந்நிலையில், மாரத்தான் போட்டியை கலெக்டர் தர்ப்பகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.

அதன்படி, முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் தகுதிச் சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.1,000 மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement

Related News