தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் அருகே போதை பொருட்கள் கடத்தி வந்த இன்ஸ்டா பிரபல டான்சர் கைது

திருவள்ளூர்: சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (22). நடன கலைஞரான இவர், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் தனது டான்ஸ் நடன வீடியோக்கள் பதிவு செய்து சமூகவலைதள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.

Advertisement

இந்த நிலையில், திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்த சிபிராஜை மறித்து சோதனை செய்தபோது பதற்றத்துடனும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சிபிராஜை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 55 கிராம் மதிப்புள்ள மெத்தபெட்டமின் போதை பொருட்கள் வைத்திருந்தார். மேலும் 4 லைட்டர்கள், விலை உயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். திருவள்ளூரில் விற்பனை செய்வதற்காக போதை பொருளை எடுத்துவந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிபிராஜை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

‘’திருவள்ளூர் பகுதியில் போதை மாத்திரைகள், போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்கள் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே, போலீசார் இரும்புக்கரம் கொண்டு போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement