தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூரில் சோகம்.. வண்டை உயிருடன் விழுங்கிய குழந்தை: உள்ளே சென்று மூச்சுக்குழாயை கடித்ததால் உயிரிழப்பு!!

திருவள்ளூர்: திருவள்ளூர் தாமரைப்பக்கத்தில் வண்டை பிடித்து உயிருடன் விழுங்கிய குழந்தை உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சக்தி நகரில், ஒரு வயது குழந்தை மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வயது குழந்தையான குகஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கீழே கிடந்த வண்டை எடுத்து விழுங்கியதாக தெரிகிறது. குழந்தை விழுங்கிய வண்டு, அதன் மூச்சுக்குழாயை கடித்துள்ளது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதைக் கவனித்த பெற்றோர் பதறியடித்துக்கொண்டு குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி இறந்துவிட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை உயிரிழப்பு தொடர்பாக உள்ளூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சம்பவங்கள், குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement