தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில் தெரு தெருவாக பெட்ரோல் திருடும் கும்பல்: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் தெரு தெருவாக ெசன்று சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு நேரங்களில் வீடுகள் முன்பு சாலையோரம் நிறுத்தப்படும் பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாக அப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement

அதை உறுதி செய்யும் வகையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 2 மர்ம நபர்கள் சர்வ சாதாரணமாக வந்து பெட்ரோலை திருடி சென்றதாக சமூக வலைத்தளங்களில் அதற்கான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சியில், பைக்கில் வரும் 2 மர்ம நபர்கள் திருவல்லிக்கேணி பகுதிகளில் ஒவ்வொரு தெருவாக சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகளில் இருந்து பெட்ரோலை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவுகளை வைத்து திருவல்லிக்கேணி போலீசார் தொடர் பெட்ரோல் திருடி வரும் 2 மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News