தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா: முதல் நாளான இன்று சண்முகருக்கு லட்சார்ச்சனை பூஜை கோலாகலமாக தொடங்கியது

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 7 நாள் நடைபெற உள்ள விழாவில் முதல் நாளான இன்று சண்முகருக்கு லட்சார்ச்சனை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழாவையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்து புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து காவடி மண்டபத்தில் சண்முகருக்கு லட்சார்ச்சனை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது 7 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் தினமும் காலை முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து காவடி மண்டபத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெறும்.

Advertisement

விழாவில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மாலை அணிவித்து பயபக்தியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். 6ஆம் நாள் தமிழ்நாட்டில் அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்காரம் நடைபெறும் ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் டன் கணக்கில் வண்ண வண்ண மலர்களால் முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சனையாக நடைபெற உள்ளது. கடைசி நாளான 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement