தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி நாளை தொடக்கம்: 7ம் தேதி புஷ்பாஞ்சலி

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை காலை லட்சார்ச்சனையுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமானுக்கு வரும் 7ம் தேதி மாலை வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. கார், பைக் மற்றும் நடந்து சென்றும் முருக பெருமானை தரிசிப்பது வழக்கம். முக்கிய விழாக்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
Advertisement

அந்த வகையில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி விழா நாளை தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு லட்சார்ச்ச்சனை பூஜைகள் நடக்கிறது. 7 நாட்களும் வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

விழாவில் இறுதி நாளான வரும் 7ம் தேதி மாலை முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். பலர், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இதையொட்டு முருகபக்தர்கள் மாலையணிந்து விரதம் தொடங்க உள்ளனர். ஏற்பாடுகளை கோயில் அறகாவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி தலைமையில் அறங்காவலர்கள், கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement