தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருவ மழையை எதிர்கொள்ள தயாராகும் திருப்பூர்: நாளை முதல் 3ம் தேதி வரை மஞ்சள் அலர்ட்

Advertisement

திருப்பூர்: தமிழகத்தில் ஜூன் 1 முதல் 3 ம் தேதி வரை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பருவ மழையை எதிர்கொள்ள திருப்பூர் தயாராகி வருகிறது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை நேற்றைய தினம் தொடங்கியது. ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 2 நாட்கள் முன்னதாகவே தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் 3 ம் தேதி வரை தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளைய மறுதினம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மற்றும் கோவை மாவட்டத்தில் மழை பெய்யும் போது கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் நிறைவடையும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூரில் ஓடும் நொய்யல் ஆற்றிலும் அதிக அளவில் தண்ணீர் செல்லும். அதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நொய்யல் ஆற்றின் தூர் வாரும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநகரின் வழியே செல்லும் நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் வளம் பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் தூர்வாரம் பணியை தொடர்ந்து ஜம்முனை ஓடை, சங்கிலி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தூர் வாரப்பட்ட நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் தங்கு தடையில்லாமல் செல்லும் பட்சத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். மீண்டும் வெயில் அதிகரிப்பு: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 13 ம் தேதி முதல் வெயில் குறைந்த மழை பெய்து தொடங்கியது. அதிகபட்சமாக 664.50 மில்லி மீட்டர் வரை மழைப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக சுட்டெரித்து வந்த கோடை வெயில் சற்று தணிந்து இதமான சூழல் நிலவியது. இந்நிலையில் திருப்பூரில் நேற்று மீண்டும் 94 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Advertisement

Related News