தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியரின் மனைவி தீக்குளித்து தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(43). ஓவிய ஆசிரியர். இவருக்கும் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (40) என்பவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கு 12 மற்றும் 9 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், கெளசல்யாவின் தந்தை அருள்மரியனுக்கும் கெளசல்யாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. சொத்தை விற்பனை செய்த பணத்தை தனக்கு கூடுதலாக கொடுக்க வேண்டுமென கெளசல்யா கடந்த ஒரு ஆண்டாக தந்தையிடம் கேட்டு வந்ததாகவும் அவர் தர மறுத்ததாகவும் தெரிகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த கெளசல்யா, கலெக்டர் அலுவலக முகப்பில் திடீரென தீக்குளித்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கெளசல்யாவின் தந்தை அருள்மரியன் உடுமலையில் ஒரு சொத்தை ரூ.40 லட்சத்திற்கு விற்றுள்ளார். அதில் ரூ.10 லட்சம் மட்டும் அவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் பணம் கேட்டு வந்துள்ளார். அதற்கு அருள்மரியன் தர மறுத்துள்ளார்.

இதனால் கெளசல்யா தீக்குளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என தெரிவித்தனர். ஆனால், கெளசல்யாவின் சகோதரர் கனகராஜ் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரபாகரன் கெளசல்யாவிடம் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா என அடித்து துன்புறுத்தியுள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்துள்ளோம். கடந்த 2 ஆண்டுக்கு முன் மீண்டும் பணம் கேட்டு வந்த போது குழந்தைகளின் எதிர்காலம் கருதி என் தங்கை மற்றும் என் தந்தை பெயரில் கூட்டுக்கணக்கு தொடங்கி பணம் செலுத்தினோம். அதிலிருந்து மீண்டும் துன்புறுத்த தொடங்கியுள்ளார். எனவே கெளசல்யாவின் கணவர் பிரபாகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Advertisement

Related News