தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூரில் பயங்கரம் காஸ் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்

Advertisement

திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, எம்ஜிஆர் நகர் அடுத்த புளியமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தாராதேவி (50). இவர் வீட்டருகில் தனக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டகைகளால் ஆன 42 வீட்டை அமைத்து வாடகைக்கு விட்டிருந்தார். மேலும் ஓடுகளால் ஆன வீட்டையும் வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் அங்கிருந்த வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீ மளமளவென பரவியது. தொடர்ந்து அங்கிருந்த தகர கொட்டகைகளால் ஆன 42 வீடுகளும் தீக்கிரையாகி தரைமட்டமானது. வீட்டில் இருந்த உடைமைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு, வடக்கு தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். மற்ற வீடுகளில் இருந்த சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி காலி இடத்தில் வைத்தனர். பகல் நேரம் என்பதால் குடியிருப்பு வாசிகள் அனைவரும் வேலைக்கு சென்றிருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement

Related News