தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர் உள்பட 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்பவர் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் - தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டனை சேர்ந்தவர் குப்புசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரது மனைவி சுகந்தி. இவர்களது மகள் பிரீத்தி (26). ஐடி ஊழியரான இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ்வர் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரீத்தி குடும்பத்தின் சார்பில் 120 சவரன் நகை, ரூ.25 லட்சம், கார் உள்ளிட்டவை கணவர் வீட்டாருக்கு வரதட்சணையாக தந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரீத்தியின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக திருப்பூரில் உள்ள தாய் வீட்டில் மன உளைச்சலில் இருந்த பிரீத்தி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரீத்தியின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 10 மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் ஆர்டிஓ விசாரணையும் தொடங்கப்பட்டது.

இதையடுத்து உடற்கூராய்வு முடிந்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நேரத்தில், பிரீத்தியின் உறவினர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு, சதீஸ்வர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பிரீத்தியின் உறவினர்கள் உடலைப் பெற மறுத்துள்ளனர். இந்நிலையில், பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமியார் உமா, மாமனார் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பிரீத்தியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

Related News