தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருப்பதி கோயிலில் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மீண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்: சுற்றுலாதுறை அமைச்சர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகளை தொடர்ந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆந்திர மாநில அறநிலைய துறை அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியிடம் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையிலிருந்து ஒருநாள் திருப்பதி சுற்றுலா பயணத்தை கடந்த 1974ம் ஆண்டு முதல் அரசு இயக்கி வருகிறது. 1997ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் அழைத்து வரப்படும் பக்தர்களுக்கு விரைவான தரிசனத்திற்கு அனுமதி அளித்து, விரைவு தரிசன டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது.

தற்போது வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு தினசரி 400 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, ஓசூர், கடலூர் மற்றும் பழனி ஆகிய மாவட்டங்களிலிருந்து திருப்பதிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கான பயணம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கான சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகள் வழங்குவதை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

விரைவு தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்வது, தமிழ்நாட்டிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழிபாட்டிற்காக வரும் பக்தர்களை மிகவும் பாதிக்கும். இதுதொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆந்திர அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியை நேற்று சந்தித்தார். மீண்டும் திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Related News