தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதிக்கு இன்று முதல்வர் வருகையையொட்டி வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாயுடன் போலீசார் சோதனை

திருமலை: திருப்பதிக்கு இன்று முதல்வர் வருகை தர உள்ளநிலையில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மறைந்த தனது சகோதரர் ராமமூர்த்தி நாயுடு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று திருப்பதி வருகிறார். அதற்காக அமராவதி உண்டவள்ளியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் வந்த இறங்கி, அங்கிருந்து சந்திரகிரி மண்டலம் நாராவாரி பள்ளியில் உள்ள தனது இல்லத்திற்கு செல்ல உள்ளார்.

Advertisement

பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு உண்டவள்ளியை அடைகிறார். இந்நிலையில் முதல்வர் வந்திறங்கும் ஹெலிகாப்டர் தளம் அருகே 5 ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் வந்தது. அதனடிப்படையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, போலீசார் மோப்ப நாய்கள் கொண்டு துல்லியமாக நேற்று சோதனை மேற்கொண்டனர். அதில் எந்தவித வெடிகுண்டும் கிடைக்காத நிலையில் மின்னஞ்சல் அனுப்பியவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement