தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி கோயிலில் கைசிக துவாதசியொட்டி உக்ர சீனிவாச மூர்த்தி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியொட்டி உக்ர சீனிவாசமூர்த்தி நான்கு மாட வீதிகளில் நேற்று காலை பவனி வந்தார். ஆடி மாதத்தில் வரும் ஆஷாட சுக்ல ஏகாதசி நாளில் விஷ்ணு பகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். ஐப்பசி மாதம் கைசிக துவாதசி நாளில் அவரை துயில் எழுப்புவது வழக்கம் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையொட்டி கலியுக தெய்வமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கைசிக துவாதசி நாளில் ஒருநாள் மட்டும் சூரிய உதயத்திற்கு முன், வெங்கடதுரைவர், ஸ்னப்னபேரா எனவும் அழைக்கப்படும் உக்ர சீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோயிலுக்கு வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அதன்படி கைசிக துவாதசியான நேற்று அதிகாலை 4.30 மணி முதல் 5.45 மணி வரை சூரிய உதயத்திற்கு முன், ஸ்ரீதேவி பூதேவியுடன் உக்ர சீனிவாசமூர்த்தி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோயிலுக்குள் கைசிக துவாதசி ஆஸ்தானம் செய்யப்பட்டது. இதில் கோயில் ஜீயர் சாமிகள், செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

* சூரிய உதயத்திற்கு முன் ஏன்?

14ம் நூற்றாண்டில், உக்ர சீனிவாச மூர்த்தி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, ​​சூரியனின் கதிர்கள் உற்சவர் மீது விழுந்து நெருப்பு மூண்டது. அப்போதிலிருந்து, சூரிய உதயத்திற்கு முன் ஏழுமலையான் கோயிலில் உக்ர சீனிவாச மூர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News