தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி கோயிலுக்குச் சென்றபோது விபத்து: டிராக்டர் மீது கார் மோதி தனியார் ஊழியர் பரிதாப பலி; மனைவி, மகன் படுகாயம்

Advertisement

திருத்தணி: திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு சென்றபோது, டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த அவரது மனைவி, மகனுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சுதாகர் (48). தனியார் நிறுவன ஊழியரான இவர், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய தனது மனைவி கோதைநாயகி (40), மகன் சுதர்ஷன் (19), மகள் தக்சனா (18) ஆகியோருடன் நேற்று காரில் திருப்பதிக்குச் சென்றார்.

திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை தனியார் மகளிர் கல்லூரிக்கு அருகில் சென்றபோது, திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டரும், சுதாகர் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி காரை ஓட்டிச் சென்ற சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுதர்ஷன், கோதைநாயகி ஆகியோர் படுகாயமடைந்தனர். தக்சனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, திருத்தணி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுதாகரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்தனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி கோயிலுக்குச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News