தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி சாலையில் மேலும் 3 சிறுத்தைகள் நடமாட்டம்: சிசிடிவி கேமரா பதிவால் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கிய நிலையில், மேலும் 3 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அலிபிரி சாலையில் பொதுமக்களையும், மாணவர்களையும் அச்சுறுத்தி வந்த சிறுத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டில் சிக்கியது.

Advertisement

இந்த சிறுத்தையை பாதுகாப்பாக கொண்டு சென்று மாமண்டூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை விட்டனர்.  இதனால் அப்பகுதியினர் நிம்மதியடைந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் மேலும் 3 சிறுத்தைகள் இந்த பகுதியில் சுற்றி வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மங்கலம் சாலையில் உள்ள டி-மார்ட்டுக்குப் பின்னால் உள்ள வனப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.

இரவு 8.53 மணிக்கு சிறுத்தையின் நடமாட்டம் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வனத்துறையினர் தெரிவித்தபடி மேலும் 3 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக தெரிகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisement

Related News