தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருப்பதி லட்டு தயாரித்த நெய்யில் பாமாயில் கலப்படம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஏ.ஆர்.டெய்ரி நிர்வாக இயக்குனர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரி இயக்குநர்கள் போமில் ஜெயின், விபின் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா வினயகாந்த் சாவடா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். அவற்றின் மீது நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. இதில் சி.ஐ.டி. போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், தேவஸ்தானத்திற்கு கலப்படம் செய்யப்பட்ட நெய்யை சப்ளை செய்ததில் போலே பாபா டெய்ரி முக்கிய பங்கு வகித்துள்ளது.

நெய் உற்பத்திக்கு போலே பாபா டெய்ரி பால் சேகரிக்கவில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர். பாமாயில், ரசாயனங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கலப்பட நெய் தயாரிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு தனது விசாரணையில் கண்டறியப்பட்டது. முன்பே தயாரிக்கப்பட்ட திட்டத்தின் படி கலப்பட நெய் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தனர். நெய் வழங்குவதற்காக ஏஆர் டெய்ரி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும், முழு மோசடி பின்னணியிலும் போலே பாபா டெய்ரி இருக்கிறது. தேவஸ்தானத்தில் போலே பாபா டெய்ரி நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளதால் ஏஆர் டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி ஆகியவை கொண்டு போலே பாபா டெய்ரி நிறுவனம் கலப்பட நெய்யை வழங்கினர் என்றார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related News