தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி மலைப்பாதையில் அரசு பஸ்சின் அச்சு முறிந்து விபத்து: தடுப்பு சுவரில் கார் மோதியது

திருமலை: திருமலையில் இருந்து 25 பக்தர்களுடன் அரசு பஸ் நேற்று மாலை திருப்பதிக்கு புறப்பட்டது. 57வது திருப்பத்தை அடைந்தபோது, பஸ்சின் முன்சக்கரத்தின் அச்சு உடைந்தது. இதனால் டயர் தனியாக கழலும் நிலை ஏற்பட்டதால் பஸ் தடுமாறி சாலையை விட்டு விலகி சிறிது தூரம் சென்று நின்றது. பேருந்தின் வேகம் குறைவாக இருந்ததாலும், டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மலைப்பாதை சாலை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.

Advertisement

பஸ்சில் இருந்த பயணிகள் வேறொரு பஸ்சில் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் சென்னையைச்சேர்ந்த பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் நேற்று மாலை தரிசனம் செய்துவிட்டு காரில் ஊருக்கு புறப்பட்டனர். முதலாவது மலைப்பாதை சாலையில் சென்றபோது, 34வது திருப்பத்தில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதியது. மேலும் அவ்வழியாக வந்த அரசுபஸ்சின் மீது மோதி நின்றது. இதில் காரில் இருந்த ஏர் பலூன்கள் திறந்து கொண்டதால் பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News