தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கூட்ட நெரிசலை செயற்கைக்கோள் மூலம் நேரடியாக கண்காணிக்க முடிவு: இஸ்ரோ குழு திருமலை வருகை

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிஆர்நாயுடு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பிஆர் நாயுடு கூறியதாவது:  அறங்காவலர் குழு ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இந்த ஆண்டு 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 9 நாட்கள் மிக சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

24ம் தேதி மீன லக்னத்தில் அன்று மாலை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். முதல்முறையாக பிரமோற்சவத்தின் போது கூட்டம் மேலாண்மையை கண்காணிப்பதற்காக இஸ்ரோ உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதன்படி பக்தர்கள் கூட்டத்தை செயற்கைக்கோள் மூலம் நேரடி கண்காணிப்பு மற்றும் செயற்கைக்கோள் மூலம் புகைப்படங்கள் மூலமாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதற்காக விரைவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருமலைக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் வழங்குவதற்கு 8 லட்சம் லட்டுகள் கூடுதலாக தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும். கருட சேவை அன்று 3 முதல் 4 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் காணாமல் போனால் குழந்தைகளை துரிதமாக கண்டுபிடிப்பதற்காக ஜியோ டாக்கிங் செய்யப்படும் என்றார்.

Advertisement