தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: திருப்பதியில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக வெளியான செய்திக்கு திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. திருப்பதி திருமலை கோவில் வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தயிர் சாதத்தில் பூரான் ஒன்று இறந்து கிடந்ததாக பக்தர் ஒருவர் விடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த விடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வைரலானது. பக்தரின் இந்த குற்றச்சாட்டு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளது.
Advertisement

அதில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. முழுவதுமாக வேக வைக்கப்பட்ட உணவில் உடல் பாகங்கள் சேதம் அடையாமல் முழு பூரான் சிதையாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே இந்த இட்டுக்கட்டப்பட்ட பொய்யை பக்தர்கள் நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. லட்டு சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement