தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய கோப்புகள் சேதம்

திருமலை: திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முக்கிய கோப்புகள் எரிந்து சேதமானது. திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இன்ஜினியரிங் அலுவலக பிளாக்கில் நிர்வாக பொறியாளருக்கு தனிஅறை உள்ளது. இந்த அறையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி அங்குள்ள கோப்புகளில் தீப்பற்றியது. இதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல முக்கிய கோப்புகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement

தீ விபத்து குறித்து முதன்மை பாதுகாப்பு அதிகாரி தர் நிருபர்களிடம் கூறுகையில், தேவஸ்தான இன்ஜினியரிங் பிளாக்கில் தீ பிடித்தது. இருப்பினும் அனைத்து கோப்புகளும் டிஜிட்டல் இ.பைலிங் செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்காக வைத்திருந்த கோப்புகள் மட்டுமே எரிந்தது. எனவே எந்த பாதிப்பும் இல்லை. இன்று(நேற்று) சனிக்கிழமை என்பதால் அலுவலகத்தில் பூஜை செய்தபோது தீப்பிடித்ததாக கூறுகின்றனர். இருப்பினும் தீவிர விசாரணைக்கு பிறகு முழுவிவரம் தெரியும் என்றார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இன்ஜினியரிங் துறையில் கடந்த ஆட்சியில் தேர்தலுக்கு முன் ₹1500 கோடிக்கும் மேல் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதில் அப்போதைய ஆளும் கட்சி மற்றும் அறங்காவலர் குழுவினர் பயன்பெறும் விதமாக பலகோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் விஜிலென்ஸ் விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக விசாரணை நடந்து வரும் நிலையில் இன்ஜினியரிங் அறையில் தீ விபத்து ஏற்பட்டு முக்கிய கோப்புகள் எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News