தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எங்களது ஆட்சியின்போது திருப்பதி உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை திருடியதாக நிரூபித்தால் தலையை வெட்டிக்கொள்வேன்: முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

 

Advertisement

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணியில் பெரிய ஜீயர் மடத்தில் எழுத்தராக இருந்த ரவிக்குமார், காணிக்கை எண்ணும்போது வெளிநாட்டு டாலர்களை மறைத்து திருடி சென்ற விவகாரத்தில் ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த 19ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் முன்னாள் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினருக்கு தொடர்பு இருப்பதாக அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி நேற்று அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேவஸ்தானத்தில் நான் தலைவராக இருந்தபோது பரக்காமணியில் திருட்டு நடந்ததாக குற்றம் சாட்டினார்கள். அது உண்மையாக இருந்தால், அலிபிரியில் என் தலையை வெட்டி கொள்கிறேன்.

இல்லையென்றால், அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஏழுமலையானை ஒரு விளையாட்டுப் பொருளாக அரசியலுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி அன்று, ஜீயர் மடத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம் இருந்து பரக்காமணியில் திருடிய ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதற்கு பரிகாரமாக மன்னிப்பு கேட்டு பத்திரபதிவில் ரூ.14 கோடி மதிப்புள்ள, சந்தை மதிப்பில் ரூ.100 கோடி சொத்துக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 19ம் ேததி எழுதி கொடுத்தனர். ரவிகுமார் பிடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவைதான் இப்போது வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement