திருப்பதி கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் ரசாயனம் சப்ளை செய்தவர் கைது!
அமராவதி: நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குக் கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் ரசாயனம் சப்ளை செய்த அஜய் குமார் என்பவரை சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. கலப்பட நெய்யிற்காக அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை பாமாயில் தயாரிக்கப் பயன்படுத்திய குற்றத்திற்காக அஜய் குமார் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement