தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமழிசை பேரூராட்சி தலைவர் இறந்ததையடுத்து புதிய தலைவர் பதவிக்கு தேர்தல்: திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

Advertisement

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி தலைவர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து புதிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என 6 வார்டுகளை அதிமுகவும் 3, 4, 5, 8, 10, 12 ஆகிய 6 வார்டுகளை திமுகவும் கைப்பற்றின. 2வது வார்டை மதிமுகவும், 9 வது வார்டை பா.ம.க.,வும், 11வது வார்டை சுயேட்சையும் கைப்பற்றினர்.

இதில், திமுக கூட்டணி 7 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும் அதிமுக கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிட்ட பாமக ஒரு வார்டையும், சுயேச்சையாக 11 வது வார்டில் போட்டியிட்டவர் வெற்றி பெற்று பாஜ வில் இணைந்தார். இதில், பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலில், திமுகவைச் சேர்ந்த உ.வடிவேல் தலைவராகவும், மகாதேவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 12ம் தேதி பேரூராட்சித் தலைவர் உ.வடிவேல் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மே 16ம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து, துணை தலைவர் ஜெ.மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தலைவர் பதவிக்கு ஆகஸ்டு 6ம் தேதி (நேற்று) தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தலைவர் பதவிக்கு திமுக, அதிமுகவினரிடையே கடும் போட்டி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தலை புறக்கணித்ததால் திமுக சார்பில் துணைத் தலைவர் ஜெ.மகாதேவன் மட்டுமே போட்டியிட்டார். இதனால் தலைவராக ஜெ.மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்த தேர்தல் நடத்தும் அலுவலர் ம.வெங்கடேஷ், அதற்கான சான்றிதழை மகாதேவனிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து திருமழிசை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதேவனுக்கு திமுக மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர், ஆதி திராவிட நலக்குழு மாநிலச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாவட்ட நிர்வாகிகள் ராஜி, ஜெயபாலன், நரேஷ்குமார், பேரூர், ஒன்றிய, நகர செயலாளர்கள் செயலாளர் முனுசாமி, கமலேஷ், தேசிங்கு, சன் பிரகாஷ், திருமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், முத்தமிழ்செல்வன், குமார், விமல்வர்ஷன், காஞ்சனா சுதாகர், சிட்டிபாபு, துணைத் தலைவர் ஸ்ரீதர், அண்ணாமலை, ஜனார்த்தனன், வெள்ளவேடு கோபிநாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement