தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமலையில் விடிய விடிய கனமழை

Advertisement

திருமலை: திருப்பதி மற்றும் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தியது. இதனால் திருமலை ஏழுமலைளான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இரவு லேசாக தொடங்கிய மழை அதன்பிறகு கனமழையாக மாறியது. இன்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக திருமலை முழுவதும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தாங்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கும், பஸ்களுக்கும் சென்றனர். சிலர் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த நிழற்பந்தல்கள், மடங்கள் மற்றும் தேவஸ்தான அறைகளில் தங்கினர். இந்த மழையின் காரணமாக வெயில் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருப்பு;

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 63,897 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29,500 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.3.66 கோடி கிடைத்துள்ளது. இன்று பக்தர்கள் தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுவாமியை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய உள்ளது. ரூ.300 கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Advertisement