தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகன் மனைவிக்கு அரசு பணி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த நவ. 18ம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினரான சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். கடந்த மாதம் 24ம் தேதி யானை பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். சிசுபாலன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த 2ம் தேதி அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், பாகன் உதயகுமார், சிசுபாலன் குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கினார்.

இந்நிலையில் நேற்று (7ம் தேதி) காலை திருச்செந்தூர் வஉசி தெருவில் உள்ள பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற கனிமொழி எம்பி, பாகனின் மனைவி ரம்யா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தக்காரின் செயல்முறை ஆணை வாயிலாக ரம்யாவுக்கு கருணை அடிப்படையில் கோயிலில் அலுவலக உதவியாளர் பணி வழங்குவதற்கான நியமன ஆணையை வழங்கினார். பாகனின் மகள் கல்விச் செலவு முழுவதையும் ஏற்பதாக தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.