தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்: 7ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி திருவிழா நாளை (சனி) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ. 7ம் தேதி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ள இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்தல புராணத்தை உணர்த்தும் விழாவாக கந்தசஷ்டி திருவிழா ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் நடைபெறுகிறது.
Advertisement

அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா நடந்தாலும் புராண காலத்தில் திருச்செந்தூரில் தான் சூரசம்ஹாரம் நடந்தது என்பதால் இங்கு வந்து விரதம் இருப்பது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம். இதனால் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களிலும் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதும், விரதம் இருப்பது வழக்கமாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

2ம் திருநாள் முதல் 5ம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான 6ம் திருநாளான நவ. 7ம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி, கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7ம் திருநாளான திருக்கல்யாணத்தை முன்னிட்டு நவ. 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடும், காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து, சுவாமி - அம்மன் தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், திருக்கோயிலில் இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடக்கிறது.

* தற்காலிக பந்தல்கள்

முந்தைய காலங்களில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கோயில் உள்பிரகாரங்களிலும், வெளி கிரிப்பிரகாரங்களிலும் தங்கி இருப்பர். மேலும் கோயிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள், திருச்செந்தூர் பகுதியில் உள்ள மடங்களில் தங்கி விரதம் இருந்து நாள்தோறும் யாகசாலையில் முருகனை வழிபட்டு வருவார்கள். காலப்போக்கில் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவதால் கோயிலுக்கு வெளியே விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பந்தல்கள் அமைக்கப்படுகிறது. திருக்கோயில் வளாகத்தில் 18 இடங்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 118 சதுர அடி பரப்பளவில் தற்காலிக நிழற்கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Advertisement