தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூரில் பயங்கரம் காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை: காதலியின் தம்பி உள்பட 3 பேருக்கு வலை

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (24). எலக்ட்ரீசியன். இவருக்கும் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை, மகளை காணவில்லை என கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் மணிகண்டன் நேற்று காலை வேலைக்காக பைக்கில் திருச்செந்தூர் முக்கிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்ட முயன்றனர். இதைப்பார்த்த மணிகண்டன் உயிருக்கு பயந்து பைக்கை கீழே போட்டு விட்டு அருகே இருந்த மரக்கடைக்குள் புகுந்துள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் ஓடஓட விரட்டி மரக்கடைக்குள் புகுந்து மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், காதல் விவகாரத்தில் பெண்ணின் தம்பி உட்பட 3 பேர் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement