தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சானூரில் 6ம் நாள் பிரம்மோற்சவம்: சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா

திருமலை: திருச்சானூரில் பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Advertisement

அதன்படி 5ம் நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்பட்டும்

லட்சுமி ஆரம் உள்பட பல்வேறு நகைகளை அணிந்து கஜவாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தாயார் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது மாட வீதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். மேலும் வீதியுலாவின்போது பழங்குடியினரின் நடனம், பரதநாட்டியும், கோலாட்டம் உள்பட பாரம்பரிய நடனங்களை ஆடியபடி கலைஞர்கள் பங்கேற்றனர். அதேபோல் சுவாமியின் திருவிளையாடல்களை விளக்கும் வகையில் பக்தர்கள் சுவாமிகளின் வேடமணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து இன்றிரவு கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளார்.

Advertisement

Related News