தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தரையிறங்கும்போது டயர்கள் உராய்ந்து புகை சரக்கு விமானம் தீப்பிடித்து எரிந்ததாக திடீர் வதந்தி: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த தனியார் சரக்கு விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் விமான டயர்கள் உராய்ந்து ஏற்பட்ட புகையால் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோலாலம்பூரில் இருந்து தனியார் சரக்கு விமானம் ஒன்று, நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமான பகுதிக்கு வந்து தரை இறங்கியது. அந்த விமானம் தரை இறங்கும்போது, விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் உராய்ந்து, வழக்கத்தை விட அதிகமாக புகை எழும்பியது.

இதையடுத்து சென்னை விமான நிலைய தீயணைப்புத் துறையினர், விமானத்தை முழுமையாக பரிசோதித்தனர். டயர்களையும் ஆய்வு செய்தனர். ஆனால் விமானத்தில் தீப்பிடிப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. விமானம் வந்து நின்றபோது, விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் அழுத்தமாக உராய்ந்து கொண்டு ஓடியதால், புகை எழும்பியுள்ளது. இது வழக்கமாக நீண்ட தூரம் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து தரையிறங்கும் போது ஏற்படுவது வழக்கம் என்று விமான பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து விமானத்தில் தீ விபத்து எதுவும் நடக்கவில்லை. அதற்கான அறிகுறிகளும் இல்லை என்று கூறிவிட்டு தீயணைப்பு துறையினர் திரும்பி சென்றனர். அதேபோல், விமான பாதுகாப்பு அதிகாரிகள் சரக்கு விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து விட்டு அவர்களும், விமானம் முழு பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்தனர்.

ஆனால் சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீ பிடித்ததாகவும், அந்த தீயை விமான நிலைய தீயணைப்பு வண்டிகள் வந்து அணைத்ததாகவும் தவறான தகவல் பரவி சென்னை விமான நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தவறான தகவல் எப்படி வெளியானது என்று அதிகாரிகள் மட்டத்தில் தீவிர விசாரணை நடக்கிறது.