தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிக்கெட் பிரச்னையில் சிஆர்பிஎப் வீரரை அடித்து உதைத்த சிவ பக்தர்கள்: வீடியோ வைரலால் 7 பேர் கைது

மிர்சாபூர்: உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் நேற்று கங்கை நதி தண்ணீர் எடுக்க பயணம் மேற்கொண்ட கன்வாரியாக்கள்( சிவ பக்தர்கள்) பலர் வந்து இருந்தனர். அப்போது டிக்கெட் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டு, சீருடையில் இருந்த ஒரு சிஆர்பிஎப் வீரரை, கன்வாரியாக்களால் சரமாரியாக தாக்கி தரையில் தள்ளி, உதைத்த சம்பவம் நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிர்சாபூர் நிலையத்தில் பிரம்மபுத்ரா ரயிலில் ஏறுவதற்காகக் காத்திருந்தபோது இந்த மோதல் நடந்துள்ளது.
Advertisement

இதுதொடர்பான வீடியோ நேற்று வைரலானது. அந்த வீடியோவில், காவி உடையில் குறைந்தது எட்டு பேர் சீருடையில் இருந்த சிஆர்பிஎப் வீரரைச் சுற்றி வளைத்து, அவரை இழுத்துச் செல்வதையும், அவர்களில் ஒருவர் அவரைத் தாக்குவதையும் காட்டுகிறது. அவர் பதிலடி கொடுக்க முயற்சிக்கும்போது, பல கன்வாரியாக்களால் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டு, தரையில் விழுவதும், அவரை கன்வாரியாக்கள் சரமாரியாக மிதிப்பதும் தெரிகிறது. மேலும் ஒருவர் சிஆர்பிஎப் வீரரை எழுந்திருக்க உதவுகிறார்.

அவர் கன்வாரியாக்களை நோக்கி சென்று அவர்களில் ஒருவரை கன்னத்தில் அறைவதையும், அதை தொடர்ந்து அனைவரும் மீண்டும் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி உதைக்கிறார்கள். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் படை ஆய்வாளர் சாமன் சிங் தோமர் தெரிவித்தார்.

Advertisement

Related News