தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குண்டர் சட்டத்தை எதிர்க்கும் மனுவை நிராகரித்த உத்தரவை இமெயிலில் அனுப்ப வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: குண்டர் சட்டத்தை எதிர்க்கும் மனுவை நிராகரித்த உத்தரவை, இமெயிலில் அனுப்ப வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
Advertisement

குண்டர் சட்டத்தை எதிர்க்கும் கருணை மனுக்களை, அரசு நிராகரிப்பது தொடர்பான உத்தரவு சம்பந்தப்பட்டோருக்கு தாமதமாகவே கிடைக்கிறது. இதை சாதகமாக்கி குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டியுள்ளது. இதன்படி இந்த மனு ஏற்கப்படுகிறது. மனுதாரரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கருணை மனுக்களை நிராகரிக்கும் உத்தரவை அதே நாளில் சம்பந்தப்பட்ட சிறை அலுவலருக்கு இமெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பிய தகவலையும் தெரிவிக்க வேண்டும். இமெயில் மூலம் வந்த உத்தரவை சிறை அலுவலர் சான்றொப்பமிட்டு சம்பந்தப்பட்டவருக்கு வழங்கி கையெழுத்து பெற வேண்டும். நிராகரித்த உத்தரவின் உண்மை நகலை பதிவு தபாலில் அனுப்பலாம். இப்படி செய்யும்போது இனி நிராகரித்த உத்தரவு தாமதமாக கிடைத்தது என யாரும் ரத்து செய்ய கோர முடியாது. இதை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement