தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஆற்றில் வீசிய ஆயுதங்கள், பொருட்களை மீட்ட கேரள போலீசார்

Advertisement

திருச்சூர்: திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஆற்றில் வீசிய ஆயுதங்கள், பொருட்களை கேரள போலீசார் மீட்டனர். ஏடிஎம் கொள்ளையில் முக்கிய ஆதாரங்களை கொள்ளையர்கள் ஆற்றில் வீசியது தெரியவந்தது. திருச்சூரில் கடந்த 27-ம் தேதி 3 ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து ரூ.65 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏ.டி.எம். கொள்ளையர்கள் 7 பேர் தப்பி வந்தபோது குமாரபாளையம் அருகே பிடிபட்டனர். ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 7 பேரில் ஒரு கொள்ளையன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நிலையில் ஒரு கொள்ளையன் காயம் அடைந்தார்.

ஏ.டி.எம். கொள்ளையர்கள் 5 பேரை காவலில் எடுத்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களை சேகரிக்க கொள்ளையர்களை கேரள போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். 3 ஏடிஎம்களில் உள்ள பணம் வைக்கும் 12 டிரேக்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை ஆற்றில் வீசியதாக கொள்ளையர்கள் போலீசிடம் தகவல் தெரிவித்தனர். கொள்ளையர்கள் கூறிய தகவலை அடுத்து ஸ்கூபா நீச்சல் குழு, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தாணிக்குடம் ஆற்றில் தேடினர்.

ஆற்றில் தேடுதல் நடத்தியதில் 9 டிரேக்கள், 2 கேஸ் கட்டர்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர். திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஆற்றில் வீசிய ஆயுதங்கள், பொருட்களை கேரள போலீசார் மீட்டனர்.

Advertisement