தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரு வேறு இடத்தில் 3 பேர் அட்டூழியம்; ேபாதையில் இருந்த பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை: புதருக்குள் சடலம் வீச்சு; தெலங்கானாவில் கொடூரம்

 

Advertisement

ஐதராபாத்: ஐதராபாத்தில் பெண் ஒருவரை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ராஜேந்திரநகர் பகுதியில், கடந்த 16ம் தேதி புதர் அருகே 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபராபாத் போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை நேற்று கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரின் விசாரணையில், ‘கடந்த 14ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருந்துள்ளார். அவரை நோட்டமிட்ட 33 வயது நபர், ஆட்டோவில் கடத்திச் சென்று மது மற்றும் பிரியாணி வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், அப்பெண்ணை ஆராம்கர் சந்திப்பில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு அங்கு வந்த 25 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக தங்கள் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கிஸ்மத்பூர் பாலத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இருவரும் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, தடிகளால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, உடலை புதருக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்’ என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகள் மூன்று பேரையும் வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement