தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய மேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது நின்றிருந்த லாரி மீது கார் ேமாதி இளம்பெண் உட்பட 3 பேர் சாவு

 

Advertisement

கோவை: கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கி அதி வேகமாக சென்ற கார், பாலத்தில் இருந்து இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் கார் முழுமையாக லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல நொறுகியது. இதில் காரில் பயணித்த இளம்பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து, பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் காரை வெளியே எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் காரில் பயணித்தவர்கள் ஒண்டிப்புதூரை சேர்ந்த அசன் மகன் ஹாரிப் (20) மற்றும் அவரது நண்பர் சேக் பஷிர் மகன் சேக் உசைன் (20) மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த பிரகாஷ் மகள் சத்ய பிரியா (17) என்பது தெரியவந்தது. அதில் ஹாரிப் பெரிய கடை வீதியில் உள்ள துணிக்கடையிலும், சேக் பஷிர் டிரைவராகவும் பணிபுரிந்துள்ளனர். சத்ய பிரியா கல்லூரியில் படித்து கொண்டு ஹாரிப் வேலை செய்த துணிக்கடையின் அருகில் உள்ள மற்றொரு துணிக்கடையில் பகுதி நேரமாக வேலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

 

Advertisement