தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் நுட்பமான வழிகள்!

விளைச்சலுக்கு வில்லங்கம் வைக்கும் நூற்புழுக்கள் என்ற தலைப்பில் நூற்புழுக்கள் குறித்தும், அவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த கவிதா, திருச்செந்தூர செல்வி, திலகம் ஆகியோர் பகிர்ந்துகொண்ட தகவல்களை கடந்த இதழில் பார்த்தோம். நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து இந்த இதழில் காண்போம். சாகுபடிக்கு தெரிவு செய்யப்பட்ட வயலை கோடை காலத்தில் ஏப்ரல் முதல் மார்ச் வரை ஆழ உழவு செய்வது அவசியம். இவ்வாறு உழவு செய்வதன் மூலம் வயலில் உள்ள நூற்புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள், அவற்றுடன் கூடிய வேர்த்துண்டுகள் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பக் கதிர்வீச்சுகளால் அழிக்கப்படுகின்றன. காய்கறி பயிர்களை தாக்கக்கூடிய வேர்முடிச்சு நூற்புழுக்களை கோடை உழவு செய்வதனால் சிறப்பாக கட்டுப்படுத்தலாம். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு பயிரிடப்படும் பயிர்களுள் நூற்புழுவிற்கு உகந்த மற்றும் ஒவ்வாத பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இம்முறையின் மூலம் நூற்புழுக்கள் தங்களுக்கு தேவையான இரைச்செடி கிடைக்காமல் அழிகின்றன.

காய்கறி பயிரை அடுத்து தானியப்பயிரையோ அல்லது வேறு பயிர்களையோ சுழற்சி முறையில் பயிரிடுவதன் மூலம் வேர்முடிச்சு நூற்புழு மற்றும் நெற்பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். உருளைக்கிழங்கிற்கு பிறகு முட்டைக்கோசு, பூக்கோசு போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் உருளைக்கிழங்கை தாக்கும் முட்டைக்கூடு நூற்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம். கவர்ச்சிப் பயிர்களான கேந்தி அல்லது செண்டுமல்லி போன்ற பயிர்களின் வேர்க்கசிவுகள் நூற்புழுக்களை அழிக்கும் வல்லமை பெற்றவை. இத்தகைய செடிகளை தனிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ சாகுபடி செய்வதன் மூலம் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். இதுபோன்றே கடுகுச் செடியினைப் பயிரிட்டு உருளைக்கிழங்கைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். தாவர நூற்புழுக்களை நுண்ணிய உயிரினங்களான பாக்டீரியா (பாஸ்சூரியா பெனிட்ரன்ஸ்), பூஞ்சாணங்கள் (டிரைகோடெர்மா விரிடி, பொக்கோனியா கிளாமிடோஸ்போரியா, வேர் உட்பூசணம்) மற்றும் ஆக்டினோமைசிட்ஸ் (ஸ்ட்ரோப்டோமைசஸ் அவர்மெட்டிலிஸ்) போன்றவற்றின் மூலம் பெருமளவில் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம்.