தோரணமலை கோயிலில் கல்வியில் மேன்மை பெற முருகர் வேடமிட்டு வழிபாடு செய்த மாணவ மாணவிகள்
Advertisement
பின்னர் அங்குள்ள அரங்கில் மாணவ, மாணவிகள் நாடு வளம் பெற வேண்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன், வில்லுப்பாட்டு, காவடி பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டு உபகரணங்கள் குறித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ததுடன் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையிலான கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Advertisement