தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்

*ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

Advertisement

கடையம் : கடையம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயில், பழமை வாய்ந்த சிறப்பு பெற்றதாகும்.

இக்கோயிலில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்டதும், அங்கேயே வசித்து மூலிகை ஆராய்ச்சிகள் மேற்கொண்டதும் இக்கோயிலின் சிறப்பு.

இந்த ஆலயத்தில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், சஷ்டி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு மலைக்கோயிலை சுற்றியுள்ள சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் கிரிவலப் பாதை நடைபெறுகிறது.

நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தையொட்டி அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு தோரணமலை முருகனை வழிபட்டனர். முன்னதாக உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழுத்திடவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement

Related News