தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை: தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
Advertisement
சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை! இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன. தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement