தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி அருகே 4 கி.மீ.தூரத்துக்கு திடீரென சிவப்பு நிறமாக மாறிய கடல் நீர்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடல் பகுதி 4 கி.மீ. தூரத்துக்கு திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்குள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன. பவளப்பாறைகள் நிறைந்த இம்மாவட்ட கடற்கரை பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள பட்டினமருதூர், தருவைகுளம் பகுதியில் நேற்று சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோரம் திடீரென சிவப்பு நிறமாக காட்சி அளித்தது. தொடர்ந்து அதிக அளவில் பஞ்சு போன்ற ஒரு பொருள் கடற்கரையோரம் ஒதுங்கியது. திடீரென சிவப்பு நிறத்தில் கரை ஒதுங்கிய பொருளை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கடல்வள ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் கேட்ட போது, ‘தருவைகுளம் பகுதியில் கரை ஒதுங்கி இருப்பது ஒருவகையான கடல் பாசி. இது மழைக்காலங்களில் கரை ஒதுங்குவது சாதாரணமாக, வழக்கமான ஒன்று தான். இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை’ என்றார்.

Advertisement