தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் பீகார் வாலிபர் தங்கிய வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடி: சென்னை அருகே தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு முகமையினர் (என்.ஐ.ஏ) சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் அவர் அடிக்கடி செல்போனில் பேசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து முஸ்பிக் ஆலம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தபோது தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி கடற்கரை கிராமத்தில் பெயின்ட் அடிக்கும் தொழிலாளியாக முஸ்பிக் ஆலம் வேலை செய்து வருவது தெரியவந்தது.

Advertisement

இதைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேர் நேற்று காலை தூத்துக்குடி சிலுவைப்பட்டிக்கு வந்து அங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் முஸ்பிக் ஆலம் உள்பட 7 பேர் தங்கி இருந்து பெயின்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததை கண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் மற்றும் அவருக்கு நெருக்கமான 3 நண்பர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்களது செல்போனை ஆய்வு செய்தனர்.

அவரது பொருட்கள் மற்றும் அறை முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது, தீவிரவாதத்துடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களை தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர். ஒன்றிய, மாநில உளவுப்பிரிவு அதிகாரிகளும் அந்த 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

Advertisement