தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி: மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார். ஏழ்மை நிலையில் உள்ள எனக்கு ரூ.12.86 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்திருப்பதாக வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த கிளமென்ஸி (47) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவரின் மனைவி கிளமென்ஸிக்கு ரூ.12.86 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஜெயபாலனின் மனைவிக்கு ஏற்றுமதி தொழில் செய்ததாக கூறி ரூ.12.86 கோடி வருமான வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த தொழிலும் செய்யாத ஒருவருக்கு ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி என நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். கிளமென்ஸியின் வாங்கிக்கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கிவிட்டதாக புகார் அளித்துள்ளார். கிளமென்ஸி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதால் மாதம் மாதம் வரக்கூடிய சம்பளம் அவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

கடந்த மாதம் 2016 - 2017, 2017 - 2018 நிதியாண்டுக்கான ஏற்றுமதி தொழில் செய்ததாக கூறி தூத்துக்குடியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ரூ.12.86 கோடி வரி பாக்கி இருப்பதாகவும், அதை உடனே கட்டவேண்டும் எனவும் தெரிவித்து அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நோட்டிஸுடன் தூத்துகுடியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. அந்த பெண் தரப்பில் நான் எந்த தொழிலும் செய்யாத நிலையில், தனக்கு எப்படி வருமான வரி போட முடியும் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவை பெற்ற ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News