தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மாநகராட்சியின் சார்பில் ரூ 14.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலத்தில் மாநகராட்சியின் சார்பில் ரூ 14.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (17.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-67, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அருகில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.9.68 கோடி மதிப்பில் 17,071 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் வார்டு அலுவலகக் கட்டடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்தக் கட்டடமானது செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், மாமன்ற உறுப்பினர், உதவி வருவாய் அலுவலர், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தனித்தனி அறைகள், இ-சேவை மையம், கலந்தாய்வுக் கூடம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பேப்பர் மில்ஸ் சாலை அருகில் மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், ரூ.4.82 கோடி மதிப்பில் 13,805 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்தக் கட்டடமானது, காத்திருப்பு அறை, புறநோயாளிகள் பிரிவு, மருத்துவ அலுவலர் அறை, யுனானி மருத்துவ அறை, பல்மருத்துவ அறை, இரத்த சேகரிப்பு அறை, ஆய்வகம், அவசரப் பிரிவு அறை, என்.சி.டி. ஸ்கிரீனிங் அறை, தடுப்பூசி செலுத்தும் அறை, பாலூட்டும் தாய்மார்கள் அறை, மருந்தகம், எம்.ஆர்.டி. அறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அறை, மருந்துகள் பாதுகாப்பு அறை, அலுவலர் மற்றும் பணியாளர் அறை, மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்த ஆய்வுகளின்போது, மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Related News