தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடுவானில் பறந்தபோது விமானத்தில் ரகளை செய்த திருவாரூர் வாலிபர் கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த திருவாரூர் வாலிபரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் நேற்று அதிகாலை சென்னை வந்தது. முன்னதாக இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த முகமது அசாருதீன் (25) என்பவர் திடீரென குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பெண் பயணிகளையும் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement

விமான பணிப்பெண்கள் முகமது அசாருதீனை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் போதையில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார். விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், போதையில் ரகளை செய்த முகமது அசாருதீனை மடக்கிப் பிடித்து, குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், துபாயில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலையில் இருந்த இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து விமான பாதுகாப்பு அதிகாரிகள் முகமது அசாருதீனை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement