தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் அருகே பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனம் தீப்பிடித்ததால் பரபரப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட மூலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் நன்னிலம் பகுதியில் இயங்கி வரும் விக்ரம் என்பவருக்கு சொந்தமான தனியார் பால் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகளை ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டு நன்னிலத்திலிருந்து கூத்தாநல்லூர் வரை சென்று கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் ரமேஷ்குமார் பால் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு கூத்தாநல்லூர் கடைகளில் விற்பனை செய்துவிட்டு மீண்டும் நன்னிலம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது விளமல் ஆயுதப்படை மதித்தனம் அருகில் ஆம்னி வேனில் பின்பக்கத்தில் புகை வருவதாக அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ரமேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆம்னி வேன் திடீரென தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை கண்ட ரமேஷ்குமார் வண்டியை நிறுத்தி கீழே இரங்கி உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் வாகனம் முழுவதும் தீ பற்றி எரிந்து தீக்கரையானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News