தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் அருகே வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை கடித்துக் குதறிய நாய்..!!

Advertisement

திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது அபிதா இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுல்தான் பீவி இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. குழந்தை காலையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று வீட்டினுள் புகுந்து குழந்தையை கண்டித்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த குழந்தையின் பாட்டி மல்லிகா பீவியும் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது அவரையும் நாய் கடித்தது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். நன்னிலம் பகுதியை சேர்ந்த மனிஷா (7), அழகிரி காலனியை சேர்ந்த ஹரிஹரன்(12), மற்றொரு பகுதியை சேர்ந்த லக் ஷனா (3) என ஒரே நாளில் 4 குழந்தைகளும் ஒரு மூதாட்டியும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வெறிநாயை பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டினுள் நுழைந்து நாய் கடிப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement