தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கணினி ஹேக்: போலீசில் புகார்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்தக் கோயிலில் ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டதற்கு பின்னர் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். செல்போன், கேமரா உள்பட எந்த மின்னணு பொருட்களையும் கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பத்மநாபசாமி கோயிலில் நிர்வாக ரீதியிலான அனைத்துப் பணிகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

வரவு, செலவு கணக்குகள் மற்றும் இந்தக் கோயில் குறித்த எல்லா விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோயிலின் கணினி ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கோயிலில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சில விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பத்மநாபசுவாமி கோயில் நிர்வாக அதிகாரி திருவனந்தபுரம் போர்ட் போலீசில் புகார் செய்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் செயல்பட்டது யார், என்னென்ன விவரங்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரிக்கின்றனர்.