தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா விருது கமிட்டி பெண் உறுப்பினரை ஓட்டலில் பலாத்காரம் செய்ய முயற்சி: பிரபல இயக்குனர் மீது பரபரப்பு புகார்

திருவனந்தபுரம்: 30வது கேரள சர்வதேச திரைப்பட விழா வரும் 12ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. ஜப்பான், கொரியா, சீனா, வியட்நாம் உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான படங்கள் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. திரைப்பட விழாவுக்காக பல்வேறு பிரிவுகளில் விருதுக் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவில் திரையிட வேண்டிய படங்கள் குறித்து ஆலோசனை நடத்த திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வருமாறு ஒரு விருதுக் கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினரான ஒரு பெண் திரைப்பட கலைஞரை திரைப்பட விழா கமிட்டி தலைவரான மலையாள இயக்குனர் அழைத்துள்ளார். இதன்படி நேற்று அவர் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அறையில் வேறு யாரும் இல்லை. திடீரென அந்த இயக்குனர், பெண் சினிமா கலைஞரை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த அறையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து புகார் அளித்தார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement